தெனாலி ராமன் கதைகள் - Thennali raaman Stories | Tamil | Tamizhan Goals

தெனாலிராமன் கதைகள் தெனாலி ராமன் கதைகளை பார்த்து மகிழுங்கள்

தெனாலிராமன் வரலாறு


சுமார் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன் . இனமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான் . அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர் . சிறுவயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை . சிறுவயதிலேயே விகடமாகப் பேசுவதில் வல்லமை பெற்றான் . அதனால் அவன் பிற்காலத்தில் " விகடகவி ' என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான் . காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன் பின் வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை " விகடகவி " இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான் . அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார் அரண்மனை விகடகவியானது எவ்வாறு என்பதும் அவனது நகைச்சுவையையும் பின் வரும் கதைகளால் அறிவோம் .

காளி மகாதேவியின் அருள் கிடைத்தல்

அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை . அதனால் ஏரி , குளம் , குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன . அதனால் விவசாயம் நடைபெறவில்லை . அதனால் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலை விரித்தாடியது . அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தனர் . அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழைபெய்து ஆறு , ஏரி , குளம் , குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன . சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்துள்ளது . என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை வாயாரப் புகழ்ந்து அவரை வணங்கி ஆசி பெற்றனர் . இதை பார்த்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தான் . இதைப் பார்த்த சாமியார் . தெனாலிராமனை அருகில் அழைத்து தம்பி நீ ஏன் சிரிக்கிறாய் ? என வினவினார் . அதற்கு தெனாலிராமன் மழை பெய்வதும் பெய்யாமல் போவதும் இறைவன் செயலே . அப்படியிருக்க தாங்கள் வந்நதவுடன் தங்கள் மகிமையால்தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம் . காக்கை உட்கார்ந்ததும் பணம் பழம் கீழே விழுந்ததாம் . அப்போது அதை பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததனால் தான் பனம்பழம் விழுந்தது என்று சொன்னார்களாம் . அது போலவே இவ்வூர் மக்கள் செயல் இருந்ததால்தான் சிரித்தேன் என்றாள் தெனாலிராமன் இதைக் கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து அவன் மேல் கோபப்படவில்லை தம்பி உன்னிடம் திறமை இருக்கிறது . நீ காளி மகாதேவியின் அருளைப் பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய் என்று நல்லாசி கூறினார் . இதைக்கேட்ட தெனாலிராமன் காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தான் . அவளின் திருஉருவத்தைக் காண பலவாறு வேண்டி தவம் இருந்தான் . கடைசியில் தெனாலிராமன் முன் தோன்றினாள் . அவளது உருவத்ததைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதிலாக பலமாக சிரித்தான் . அவன் சிரிப்பதைப் பார்த்த காளி , என் கோர உருவத்தைப் பார்த்து எல்லோரும் அஞ்சுவார்கள் . நீயோ பலமாகச் சிரிக்கிறாய் ? ஏன் என்று வினவினாள் . அதற்கு தெனாலிராமன் எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை . அப்படியிருக்க உனக்கு ஆயிரம் தலை உள்ளது . ஆனால் கைகள் இரண்டே பெற்றுள்ளாய் . உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன் . அதனால் எனக்கு சிரிப்பு வந்தது என்றான் . இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்து விட்டாள் . பின் மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன் . பெரும் பேரும் புகழும் பெற்றுத்திகழ்வாய் . உனக்கு கஷ்டம் நேரும் போதெல்லாம் என்னை நினை . உனக்கு உதவி செய்கிறேன் எனக்கூறி மறைந்தாள் .

ராஜகுருவின் நட்பு ஏற்படுதல்

விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார் . தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார் .

அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச்சென்றனர் . இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான் . தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் சிஷ்யன் ஆனான் . ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான் . அவன் வேண்டுகோள்படியே ராஜகுருவும் அரண்மனையில் வேலையில் சேர்த்து விடுவதாக வாக்களித்தார் . நான் போய் ஆள் அனுப்புகிறேன் . அதன் பின் நீ வா என்று சொல்லி விஜயநகரத்துக்குச் சென்று விட்டார் . தெனாலிராமன் மிகக் கெட்டிக்காரனாக இருக்கிறான் . இவனை மன்னரிடம் சொல்லி அரண்மனையில் விகடகவியாக சேர்த்து விட்டால் நம் வேலை போய்விடும் என்று எண்ணிய ராஜகுரு தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பவே இல்லை . தெனாலிராமனும் ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள் ஓடிவிட்டன . எந்தத் தகவலும் அவனுக்குக் கிட்டவில்லை . ஆகையால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான் . அதன்படியே மனைவி , மகனுடன் பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தான் .

ராஜ குருவை சந்தித்தல்

பலவித இடையூறுகளுக்கிடையே தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான் . தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார் .

யாரப்பா நீ ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் . இதைக் கேட்ட தெனாலிராமன் பதறினான் . ராஜகுருவே நான்தான் தெனாலிராமன் . தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம் . நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சென்னீர்கள் . ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள் . பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள் வராததால் நான் நேரில் வந்துள்ளேன் . தயவு செய்து என்னை மன்னரிடம் சொல்லி அரசவையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான் . உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா ! மரியாதையாக வெளியே போ : | இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார் . வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தான் . காளி மகாதேவியைத் துதித்தான் . அரசவை விகடகவியாக்குதல் அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது . அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர் . தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான் . மன்னர் கிருஷ்ணதேவராயர் வந்தவுடன் சபை கூடியது . வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னார் .தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார் . ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை . அவர் பேச்சின் இறுதியில் தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார் . அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை , உண்பதும் மாயை என்று சொன்னார் . இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை , ராஜகுரு மௌனமாகி விட்டார் . சுற்றும் முற்றும் பார்த்த தெனாலிராமன் எழுந்து நின்றான் . தத்துவஞானியைப் பார்த்து , " ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்று கிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா ? " எனக்கேட்டான் . அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான் . அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னான் . விருந்து ஏற்பாடு ஆயிற்று . அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார் . தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக் கூடாது எனக் கட்டளை இட்டுவிட்டனர் . அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான் . இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார் .

ராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல்

ஒரு நாள் அதிகாலை நேரம் ராஜகுரு குளத்துக்குக் குளிக்கச் சென்றார் . அப்போது அவரை அறியாமலேயே தெனாலிராமன் பின் தொடர்ந்தான் . குளக்கரையை அடைந்ததும் ராஜகுரு துணிமணிகளை எல்லாம் களைந்து கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாக குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார் . மறைந்திருந்த தெனாலிராமன் ராஜகுருவின் துணிமணிகளை எடுத்துக்கொண்டு மறைந்து விட்டான்.

குளித்து முடித்து கரையேறிய ராஜகுரு . துணி மணிகளைக் காணாது திடுக்கிட்டார் . உடனே தெனாலி ராமன் அவர் முன் தோன்றினான் . தெனாலிராமன் எனது துணிமணிகளைக் கொடு என்று கொஞ்சினார் . அதற்குத் தெனாலிராமனோ உன் துணிமணிகளை நான் பார்க்க வில்லை . நானும் குளிக்கவே இங்கு வந்துள்ளேன் . என்னிடம் வம்பு செய்யாதீர்கள் என்றான் . ராமா ! என் துணிமணிகளைக் கொடுத்துவிடு . நன்கு விடியப் போகிறது . இக்குளத்துக்கு இன்னும் சிறிது நேரத்தில் பெண்கள் எல்லாம் குளிக்க வந்து விடுவார்கள் . உடனே என் துணிமணிகளைக் கொடு என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினார் . அவர் கெஞ்சுதலைக் கேட்ட தெனாலிராமன் என் நிபந்தனைக்கு உட்பட்டால் உன் துணிமணிகளைத் தருகிறேன் . இல்லையேல் தர முடியாது என்று கூறி விட்டான் . அதைக் கேட்ட ராஜகுரு நீ என்ன நிபந்தனை விதித்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன் . உடன் துணிமணிகளைக் கொடு என்று வேண்டினார் . என்னை அரண்மனை வரை உன் தோளில் சுமந்து செல்ல வேண்டும் . அப்படியென்றால் தருகிறேன் . இல்லையென்றால் தரமுடியாது என்று கூறி விட்டான் . தெனாலிராமன் மிகப் பொல்லாதவன் என அறிந்து கொண்ட ராஜகுரு சம்மதித்தார் . பின் துணிமணிகளை ராஜகுருவிடம் கொடுத்தான் . உடையணிந்து கொண்ட ராஜகுரு தெனாலிராமனை தன் தோள் மீது சுமந்து சென்று கொண்டிருந்தார் . இதை ஊர் மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் . இதை மன்னர் கிருஷ்ண தேவராயரும் உப்பரிகையிலிருந்து பார்த்து விட்டார் . உடனே தனது காவலாளிகட்கு உத்தரவிட்டார் . அதாவது தோள் மேல் இருப்பவனை நன்கு உதைத்த என்முன் நிற்பாட்டுங்கள் என்று . உப்பரிகையிலிருந்து மன்னன் பார்த்து விட்டதை அறிந்த தெனாலிராமன் , அவர் தோளிலிருந்து இறங்கி அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் ஐயா என்னை மன்னியுங்கள் . ராஜகுருவை அவமானப்படுத்திய பாவம் என்னைச் சும்மாவிடாது . ஆகையால் என் தோள் மீது தாங்கள் அமருங்கள் . நான் உங்களை சுமந்து சொல்கிறேன் என்றான் . அவன் பேச்சை உண்மையென்று நம்பிய ராஜகுரு தெனாலிராமன் தோள் மீது உட்கார்ந்து கொண்டான் . தெனாலிராமன் ராஜகுருவை சுமந்து சென்று கொண்டிருக்கையில் காவலாட்கள் அருகில் வந்துவிட்டனர் . ராஜகுருவை நையப்புடைத்து மன்னர் முன் நிற்பாட்டினர் . இதைப் பார்த்த மன்னர் ராஜ குருவை ஏன் அடித்தீர்கள் என வினவினார் அதற்கு காவலாட்கள் தெனாலிராமன் தோள் மீது அமர்ந்து இருந்தவர்தான் இந்த ராஜகுரு . தாங்கள் தானே தோள் மீது அமர்ந்திருப்பவரை அடித்து உதைக்கச் சொன்னீர்கள் . அதன்படியே செய்துள்ளோம் என்றனர் . மன்னர் ராஜகுருை வை அழைத்து விவரத்தைக் கேட்டார் . ராஜகுருவும் தன் தவறை உண்மையென்று ஒத்துக்கொண்டார் . தெனாலிராமன் செய்கை மன்னருக்கு நகைச் சுவையுண்டு பண்ணினாலும் அவன் செய்த தவறுக்கு தக்க தண்டனை வழங்க விரும்பினார் . ஆகையால் தெனாலிராமனை அழைத்து வர அரண்மனை காவலாட்களை அனுப்பினார் . காவலாட்களும் தெனாலிராமனை சிறிது நேரத்தில் மன்னர் முன் கொண்டு வந்து நிற்பாட்டினர் . தெனாலிராமன் நீ ராஜகுருவை அவமானப் படுத்திவிட்டாய் , மேலும் அவரை உதையும் வாங்க வைத்து விட்டாய் . இது மன்னிக்க முடியாத குற்றமாகும் . ஆகவே உன்னை சிரத்தேசம் செய்ய உத்தரவு இடுகிறேன் என்றார் மன்னர் . இதைக் கேட்ட தெனாலிராமன் தன் உயிருக்கு ஆபத்து வந்ததை எண்ணி வருந்தினான் . அவன் தன் இஷ்ட தேவதையான காளி தேவியை தன்னைக் காப்பாற்றும்படி மனதிற்குள் துதித்தான் . காவலாட்களும் அவனை கொலை செய்ய அழைத்துச் சென்றார்கள் . அப்போது அவர்களிடம் தன்னை விட்டுவிடும்படியும் பணமும் தருவதாகவும் வேண்டினான் . காவலாட்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவனது வேண்டுகோளுக்கு இணங்கி கொலை செய்யாமல் விட்டு விட்டனர் . இனி இவ்வூரில் இருக்காதே வேறு எங்காவது போய்விடு என்றும் சொன்னார்கள் . அவர்களிடம் அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய தெனாலிராமன் தன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டான் . காவலாட்களும் ஒரே கோழியை அறுத்து அதன் இரத்ததை வாளில் தடவி மன்னரிடம் தெனாலிராமனை கொலைசெய்து விட்டோம் என்று சொல்லி விட்டனர் . மன்னரும் இதை உண்மை என்று நம்பினார் .

தெனாலிராமனின் மறுபிறவி

தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது .

அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர் . நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும் . அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர் . இதைக்கேட்ட மன்னர் கலங்கினார் . இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார் . அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால் நலம் என்றனர் . உடனே மன்னர் ராஜகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்ய உத்தரவு விட்டார் . இதைக்கேட்ட ராஜகுரு நடுநடுங்கினார் . நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது என்றார் . அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார் . மன்னர் கட்டளையை மீறி முடியாத ராஜ குரு பூஜைக்கு ஒத்துக்கொண்டார் . அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை நடத்தினர் . ராஜகுரு , பூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே ! உன் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்துள்ளோம் . என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது . இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக் கொண்டு அரண்மனைக்கு ஓடினர் . அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார் . இருப்பினும் மன்னரை எழுப்பினர் . நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினர் . இதைக் கேட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்தார் . பின் ஒரு முடிவுக்கு வந்தார் . தெனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக் கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பசைசாற்றி அறிவிக்கச் செய்தார் . இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை . சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காண வந்தார் . மன்னரும் அந்தத்துறவியை தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்ம ராட்சசனை ஒழித்துக் கட்டும் படி வேண்டினார் . இதைக்கேட்ட துறவியர் , மன்னர் பெருமானே கவலையை வீடுங்கள் , பிரம்மராட்சசனை என்னால் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன் . இது நிரந்தரமான ஏற்படாக இருக்காது . மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால் தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார் . அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா ? என வினவினார் மன்னர் . ஓ ! தாராளமாக என்னால் முடியும் என்றார் துறவி . மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள் . அதுவே எனக்குப் போதும் என்றார் . உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தார் . நான்தான் தெனாலிராமன் . துறவி வேடத்தில் வந்தேன் என்றார் . இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டார் . பின் ஆயிரம் பொன் பரிசளித்தார் .

ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான் . அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான் . போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள் . பலர் மாண்டார்கள் . . இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது .

ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான் . அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக் கொண்டான் . தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக் கொன்று விட்டான் . இச்செய்தி மன்னனுக்கு எட்டியது . தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார் . ஏன் சாமியாரைக் கொன்றாய் என்று கேட்டார் . அதற்குப் போதை மருந்தால் பலர் பைத்தியம் பிடித்து மாண்டனர் . ஆகையால் தான் கென்றேன் என்றான் . போலிச்சாமியார் தவறு செய்து இருந்தாலும் அவனைக் கொல்ல உனக்கு ஏது அதிகாரம் ? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும் . அப்படிச் தெரிவித்திருந்தால் நானே அந்தப் போலிச் சாமியாருக்குத் தக்க தண்டனை கொடுத்திருப்பேன் . இவ்விஷயத்தில் நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்பும் கூறினார் . உடனே தன் ஆட்களை அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குழியை வெட்டி அதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையை இடறுமாறு பணித்தார் . அவ்வாறே தெனாலிராமனும் குழியில் கழுத்தளவு புதைக்கப்பட்டான் . பின் யானையைக் கொண்டு வர பணியாளர்கள் சென்று விட்டனர் . அப்போது சிலகழுதைகளை ஒட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான் வந்து கொண்டிருந்தான் . ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவு புதையுண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான் பின் தெனாலிராமனிடம் வந்து ஐயா , தாங்கள் ஏன் இவ்வாறு புதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான் . அதற்கு தெனாலிராமன் எனக்கு மிக நீண்ட நாட்களாகவே முதுகு கூன் விழுந்து விட்டது .

அதனால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தேன் நேற்று ஒரு வைத்தியரை ஆலோசனை கேட்டேன் அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறு இருந்தால் கூன் நிமிர்ந்து விடும் . என்று சொன்னார் . நான் குழியில் புதையுண்டு ஒருநாள் ஆகப் போகிறது . ஆகையால் மண்ணைத் தோண்டி என்னை மேலே எடு என்றான் . அதன்படியே கூன் வண்ணாலும் மண்ளைத் தோண்டி தெனாலிராமனை மேலே தூக்கி விட்டான் . இப்போது தெனாலிராமனைப் பார்த்தான் அவன் முதுகு கூன் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றாள் . இதை உண்மை என்று நம்பிய வண்னான் அதே குழியில் அவன் சொன்னான் தெனாலி ராமனை பார்த்தான். அவன் முதுகு கூன் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பிய வண்ணாண் அதே குழியில் அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலி ராமனும் கூன் வண்ணானை அவ்வாறே செய்தான் . உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஒட்டமாக ஒடி விட்டான் . சிறிது நேரத்தில் பணியாட்கள் யானையுடன் அங்கு வந்தனர் . யானையை விட்டு குழியில் புதையுண்ட மனிதனின் தலையை இடறச் செய்தனர் . கூன்வண்ணான் தலை சின்னா பின்னமாகியது . அச்சமயத்தில் தன் அரண்மனை அதிகாரிகளும் நம் போலிச் சாமியாரைக் கொன்றது நியாயம் தான் அதனால் தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர் . அந்நேரத்தில் பணியாட்களும் அங்கு வந்து “ தெனாலிராமனின் தலையை யானையை விட்டு இடறி விட்டோம் " என தெரிவித்தனர் . தெனாலிராமனின் மரணத்துக்கு மன்னர் வருந்திக் கொண்டிருக்கையில் மன்னர் முன் தெனாலிராமன் தோன்றினான் . தெனாலிராமனைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார் . " நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே ! பின் எப்படி உயிரோடு வந்தாய் என்று விளவினார் . அதற்குத் தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான் . மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப்பாராட்டி பரிசு வழங்கினார்.

தமிழ் கதைகளை வாசித்தமைக்கு நன்றி

Post a Comment

Thanks for your comments. Please be visit and given positive review on our site.

Previous Post Next Post